இந்தியா

ஆளில்லா இந்திய உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியதா பாகிஸ்தான்? 

DIN

இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஒன்றை  சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளதாவது:

எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராக்சிக்ரி செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தால் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களை நாங்கள் கைப்பறற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT