இந்தியா

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இசை புஷ்பாஞ்சலி

DIN

கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 101-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு இசை புஷ்பாஞ்சலி சமர்ப்பிக்கப்பட்டது.
கர்நாடக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 101-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பதியில், பூர்ணகும்ப வளைவு அருகில் உள்ள அவரது முழுஉருவச் சிலைக்கு சனிக்கிழமை சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இந்தச் சிலைக்கு தேவஸ்தான அதிகாரிகள் மலர் மாலை அணிவித்து புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
மேலும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான இசை, நடனக் கல்லூரியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் சிறப்பு இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் அவர் பாடிய கர்நாடக இசை பாடல்களை பாடி இசைபுஷ்பாஞ்சலி செலுத்தினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT