முகப்பு
இந்தியா

சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர்: தம்பிதுரை

சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 
சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர். கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. ஜெயலலிதாவை பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. 

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. அனைவரும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறோம். கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக வரும் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →