இந்தியா

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்குத் தடை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

DIN

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த தடைக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஆர்.சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கு தேர்வு செய்து வருவதால் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஏற்கப்பட்ட மனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் உள்ளிட்டவற்றின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டிசெல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ, அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT