இந்தியா

உச்ச நீதிமன்ற இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்! 

உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புதுதில்லி: உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் வியாழனன்று காலை ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. நீதிபதி லோயா சர்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரும் மனு மீது, உச்ச நீதிமன்றம் வியாழனன்று காலை தீர்ப்பளித்தது.     

இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இணையதளம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இணையதள முகப்புப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற இணையதளம் ஹேக் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பிரேசிலை சேர்ந்த ஹேக்கிங் குழு ஒன்றுக்கு தொடபுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோல சில நாட்களுக்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக இணையதளம் உள்பட பல்வேறு அரசு இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT