வாஜ்பாய் உடலுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவாஜ்பாய் உடலுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வாஜ்பாய் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.