இந்தியா

வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது - ராஜ்நாத் சிங்

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தெரிவித்தது, "அடல்ஜியின் மறைவு எங்களுக்கு மிகவும் வருந்தத்தக்க தருணம். அவருடைய உடல் இன்னும் சற்று நேரத்தில் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தலாம்" என்றார்.

இதைத்தொடர்ந்து, அவரது உடல் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தில்லி விஜய்காட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT