புகைப்படம்: ஏஎன்ஐ (கோப்புப்படம்) 
இந்தியா

கர்நாடக வெள்ளத்துக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

கர்நாடக மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி முதல்வர் குமாரசாமி உறுதியளித்தார்.

DIN

கர்நாடக மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி முதல்வர் குமாரசாமி உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் குடகு, தக்ஷி்ன கன்னடா, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் ஷிவமோக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை அறிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருப்பதாவது,

"கர்நாடகத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து முதல்வர் குமாராசாமியிடம் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்திக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT