மேக்கேதாட்டுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில்அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது.
இதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகஅரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.