முகப்பு
இந்தியா

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் அக்னி ஏவுகணை வெற்றிகர சோதனை 

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

Updated On : 10 டிசம்பர், 2018 at 7:00 PM
பகிர்:

புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த,  17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் குறிப்பிட்ட இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில்  இருந்து திங்கள் பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.