இந்தியா

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் அக்னி ஏவுகணை வெற்றிகர சோதனை 

DIN

புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த,  17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் குறிப்பிட்ட இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில்  இருந்து திங்கள் பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT