இந்தியா

76 வயதில் பட்டப்படிப்புக்கான தேர்வெழுதிய முதியவர்.. அதுவும் இடது கையில்

கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர்.

ENS


விஜயபுரா: கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர்.

76 வயதான அந்த முதியவர், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது 4வது முதுநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வை எழுதியுள்ளார்.

நிங்கய்யா வடேயார், இளஞ்சிவப்பு நிற மேலாடையுடன் தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு தேர்வெழுத வந்திருந்தார். அவரைப் பார்த்து உடன் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, தேர்வறைக்கு வந்த கண்காணிப்பாளர் கூட சற்று ஆச்சரியம் அடைந்திருப்பார்.

கன்னட மொழியில் பள்ளிப் படிப்பை முடித்திருந்தாலும் தற்போது ஆங்கில வழியில்தான் தேர்வை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல அவர் தனது இரண்டு கைகளாலும் தேர்வெழுதிம் திறன் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல வலது கையில்தான் எழுதி வந்துள்ளார். வயோதிகம் காரணமாக கை வலுவிழந்து போனதால், தொடர் முயற்சியால் இடது கையிலும் எழுத பயிற்சி எடுத்துள்ளார்.

2000ஆவது ஆண்டில் பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் வடேயர் தொடர்ந்து படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT