தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இல்லம் வைகை தமிழ் இல்லம் மற்றும் பொதிகை தமிழ் இல்லம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு இல்லம் அமைப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் அங்கு தமிழ்நாடு இல்லம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு புதிய பெயர் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், பழைய இல்லத்துக்கு 'வைகை தமிழ் இல்லம்' என்றும் புதிய இல்லத்துக்கு 'பொதிகை தமிழ் இல்லம்' என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.