முகப்பு
இந்தியா

உ.பி.: காங்கிரஸில் இணைந்தார் நசீமுதீன் சித்திக்கி

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நசீமுதீன் சித்திக்கி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நசீமுதீன் சித்திக்கி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கிய முஸ்லிம் தலைவராக அறியப்பட்ட சித்திக்கி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு மே மாதம் பகுஜன் சமாஜில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தவிர மாநில முன்னாள் அமைச்சர்கள் ஒ.பி.சிங், லியாகத் அலி மற்றும் முன்னாள் எம்எல்ஏக் கள் உள்ளிட்டோர் காங்கிரஸில் இணைந்தனர்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உள்ளிட்டோர் தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சித்திக்கியின் ஆதரவாளர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. நானா படோல் அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸில் இணைந்தார். அவர் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →