ரிலையன்ஸ் பிக் டிவி, 1 வருடத்துக்கு இலவச சேனல்கள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் பிக் டிவி நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் விஜேந்தர் சிங் கூறியதாவது:
ரிலையன்ஸ் பிக் டிவி இந்தியர்களின் பொழுதுபோக்கு அம்சத்தின் ஒரு புதிய சரித்திரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று முதல் உங்களின் பொழுதுபோக்கு முற்றிலும் இலவசமாகிறது.
இனி ஒவ்வொரு இந்தியர்களின் இல்லங்களிலும் உயர்தர ஹெச்டி தொழில்நுட்பத்துடன் கூடிய சேனல்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட தொகுப்புகள் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே இலவசமாக பெற முடியும்.
இதற்காக ஒரு வருடத்துக்கு அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் மற்றும் ஹெச்டி ஹெச்ஈவீசி தொழில்நுட்பம் கொண்ட செட்டாப் பாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) வகையிலான 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.