இந்தியா

மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: 5 மல்யுத்த வீரர்கள் பலி

DIN

மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் சனிக்கிழமை காரும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சதாரா மாவட்ட கிராமமொன்றில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற அந்த மல்யுத்த வீரர்கள், பின்னர் சாங்லி மாவட்டத்திலுள்ள தங்களது ஊருக்கு ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காடேகான் - சாங்லி சாலையில் சனிக்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்த அந்த கார், எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தப்பியோடிய டிராக்டரின் ஓட்டுநரை தேடி வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT