இந்தியா

சரத்பிரபு தற்கொலை செய்து இருக்கலாம்: தில்லி போலீசார் தகவல்

DIN

சரத்பிரபு தற்கொலை செய்து இருக்கலாம் என்று தில்லி போலீசார் கூறியுள்ளனர். 

தில்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு அவரது அறையில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், சரத்பிரபு இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனிடையே சரத்பிரபு ஊசி மூலம் பொட்டாஷியம் குளோரைடை செலுத்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தில்லி போலீசார் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்ட கழிவறையில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் கழிவறைக்கு வெளியே பொட்டாஷியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT