இந்தியா

தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் பல்கலை., மாணவர்கள்: வைரலாகும் சர்ச்சை விடியோ

பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ANI

ஸ்ரீநகர்: பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் வழக்கம் போல் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.ஆனால் ஒரு சில மாணவர்கள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களது நடவடிக்கை பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சில மாணவர்களின் இத்தகைய செயலுக்கு பலத்த கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT