இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தார்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
குப்வாரா மாவட்டத்திலுள்ள கண்டி வனப் பகுதியில் வழக்கமான ரோந்துப்பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் . 
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். 
இதில், படுகாயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று 
காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT