ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தரகண்டில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு முதல் உத்தரகண்டில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளை மிகக் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், மலைப் பகுதியில் சாலைகளில் செல்லும் போது எச்சரிக்கையாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.