இந்தியா

திரிபுராவில் தொடரும் தலைவர்களின் சிலை சேத விவகாரம்

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பைதியநாத் மஜூம்தார் சிலை புதன்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.  

ENS

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பைதியநாத் மஜூம்தார் சிலை புதன்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.  

திரிபுராவில், 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு அங்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லெனின், சேகுவாரா போன்ற தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த வரிசையில் புதன்கிழமை இரவு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மஜூம்தார் சிலை சேதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜகவைச் சேர்ந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்து வருகிறது.  

மஜூம்தார், 1993 முதல் 1998 வரை  மாநில துணை முதல்வராக இருந்துள்ளார். 1998-2008 வரை கட்சியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டுள்ளார். அதன்பிறகு, கட்சி செயல்பாடுகளில் இருந்து அவர் ஒய்வு பெற்றார். இவர், கடந்த 2011-இல் காலமானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

SCROLL FOR NEXT