இந்தியா

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

ஜூன் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

DIN

புது தில்லி: ஜூன் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக, கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேடு தொடர்பான பிரதான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஏர்செல்-மேக்ஸிஸ் கறுப்புப் பண முறைகேடு குற்றச்சாட்டில் ஜூன் 12-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT