லக்னௌ: இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது.
இந்திரா காந்தி பிரதிஸ்தான் பகுதியில் நடைபெறும் இந்த திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மாம்பழங்களின் அளவு 184 லட்சம் மெட்ரிக் டன். இதில் 40-45 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தை உத்தரபிரதேச மாநிலம் உற்பத்தி செய்கிறது.
பல்வேறு வகையான மாம்பழங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த திருவிழா நடத்தப்படுகிறது. அதே சமயம், வாங்குவோரும், விற்போரும் சந்தித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.