குவகாத்தி: மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர், திப்ருகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால், மனைவியின் தொண்டையை அறுத்துக் கொலை செய்த குற்றவாளி பூர்ணா நஹர் தேகாவை, அங்கிருந்தவர்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பூர்ணா நஹர் டேகா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பெயிலில் வந்தார்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்துக்கு வந்திருந்த மனைவி ரிடாவை, கணவர் பூர்ணா, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தொண்டையை அறுத்துள்ளார்.
உடனடியாக ரிடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே, பாலியல் பலாத்காரக் குற்றம்சாட்டப்பட்டவர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.