முகப்பு
இந்தியா

உ.பி.: கார் தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் பலி; குடும்பத்தினர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 25 ஜூன், 2018 at 2:38 PM
பகிர்:


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணுவ வீரர் ராகுல் குமார் தனது குடும்பத்தோடு, கங்கை நதிக்கரையில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது நக்லா ஹர்து கிராமத்துக்கு அருகே இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் இம்பாலில் பணியாற்றும் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.