இந்தியா

சமாஜவாதி சார்பில் ஜெயா பச்சன் போட்டி

DIN

நாடாளுமன்றத்தின் மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு நான்காவது முறையாக அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சனை நிறுத்தவுள்ளதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சௌதரி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் கூறுகையில், 'லக்னௌவில் ஜெயா பச்சன் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது' என்றார்.
சமாஜவாதி சார்பில் கடந்த 2004, 2006, 2012 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயா பச்சன் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அவர் நான்காவது முறையாக அக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். சமாஜவாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சௌதரி முனாவர் சலீம், தர்ஷன் சிங் யாதவ், அலோக் திவாரி ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT