முகப்பு
இந்தியா

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்கள் முடக்கம்! 

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை  முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

புதுதில்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை  முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.   

இந்நிலையில் இந்த வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை  முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக    அமலாக்கத் துறை தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →