இந்தியா

விருப்பப்பட்டுத்தான் அந்தப் பெண் உறவு வைத்து இருந்தார்: சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் வாதம்! 

DIN

பெங்களூரு: சாமியார் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறிய பெண் அவராகவே விருப்பப்பட்டுத்தான் உறவு வைத்துக் கொண்டார் என்று சாமியார் நித்யானந்தா தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் நித்யானந்தா. இவர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆர்த்தி ராவ் என்பவர் கற்பழிப்பு புகார் கூறினார்.

இவர் சில வருடங்கள் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது 'ஆன்மீக பேரின்பம்' என்ற பெயரில் தன்னை சாமியார் நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் ராமநகரம் போலீசார் நித்யானந்தா மீது புகார் பதிவு செய்து பெங்களூரு நீதிமன்றதில்  வழக்கு தொடர்ந்தனர். அதன் பெயரில் நீதிமன்றம் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கும் சோதனை நடத்துவது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வக்கீல் நாகேஷ் ஆஜராகி வாதாடினார். அப்பொழுது அவர் , 'நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் ஆர்த்தி ராவ் பிடதி ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி உள்ளார். அவர் ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத்தான் நித்யானந்தாவுடன் உறவு வைத்துக் கொண்டார். பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது.

இவ்வாறு அவர் வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT