இந்தியா

2 ஜி: தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

DIN

2 ஜி வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு உள்ளிட்ட 2ஜி தொடர்புடைய வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை (ஈடி) ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், '2 ஜி தொடர்புடைய வழக்குகளின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மிகவும் உணர்ச்சிமிக்க இதுபோன்ற வழக்குகளின் விசாரணை குறித்து நாட்டு மக்களுக்கு மறைக்க முடியாது. 2ஜி வழக்கில் காலதாமதம் செய்வது சரியானதும் அல்ல. 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா?' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 
இதுதவிர, '2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்புடைய வழக்குகளின் விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை இரு வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் வேண்டும்' எனவும் உத்தரவில் தெரிவித்திருந்தது.
மேல்முறையீடு: இந்நிலையில், 2 ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT