இந்தியாவின் ஃபிளிப்கார்ட்டை வாங்கியது அமெரிக்காவின் வால்மார்ட்
இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
புது தில்லி: இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம், வால்மார்ட் நிறுவனம் அதன் உரிமையாளராக மாறியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போட, ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்த வியாபாரம் மிகவும் உதவும் என்று கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.