இந்தியா

ஹெப்பல் தொகுதி வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு அறிவிப்பு

Raghavendran

222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இங்கு மாலை 5 மணி நிலவரப்படி 61.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், ஹெப்பல் தொகுதியில் அமைந்துள்ள 2-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இடம்பெற்றிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதானதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காலை முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென செயலிழந்தன. பின்னர் அதனை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும் இந்த முயற்சிகள் பலனளிக்காத காரணத்தால் மே 14-ஆம் தேதி மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT