முகப்பு
இந்தியா

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 14 மே, 2018 at 12:00 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் 1300 கடைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.