முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: நிதித்துறையில் இருந்து அருண் ஜேட்லி விடுவிப்பு 

மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: நிதித்துறையில் இருந்து அருண் ஜேட்லி விடுவிப்பு 

மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

புதுதில்லி: மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சைக்கு பின்பு அருண் ஜெட்லி வேகமாக குணமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அருண் ஜேட்லி வகித்து வந்த நிதிதுறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அருண் ஜெட்லியின் உடல் நிலை சரியாகும் வரையில் அவர் பொறுப்பை கவனிப்பார் எனத்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல ஸ்மிருதி இரானியிடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தற்பொழுது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →