இந்தியா

ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று மத்திய பணியாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

DIN

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறையின் 30வது கூட்டம் தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார். 

"ஆதார் என்பது, உயிர்வாழ் சான்றிதழை வங்கிக்கு செல்லாமலே சமர்ப்பிப்பதற்கான ஒரு கூடுதல் தொழில்நுட்ப வசதி. ஆகவே, அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கோடு ஆதாரை இணைக்காததால் ஓய்வூதியம் பெறுவதற்கு சிரமப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT