இந்தியா

ராஜீவ் காந்தி நினைவு தினம்: ராகுல் காந்தி டுவீட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 127-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார். 

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தில்லியில் உள்ள வீர் பூமியில் அவரது நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தை ராஜீவ் காந்தி குறித்து டுவீட் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 

"வெறுப்பை சுமந்து செல்பவர்களுக்கு தான் அது சிறை என்று எனது தந்தை எனக்கு கற்றுத்தந்துள்ளார். எனக்கு கற்றுத் தந்த அன்பு, அனைவரையும் மதிப்பது என தந்தையாக ஒரு மகனுக்கு அவர் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசுகளுக்காக அவருடைய இன்றைய நினைவு தினத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

உங்களை (ராஜீவ் காந்தி) விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்திருப்போம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT