முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு கவச வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது சிலர் வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.  இதனால் வாகன ஓட்டுநர் நிலைதடுமாறியதன் காரணமாக வாகனம் தனது கட்டுப்பாட்டினை இழந்தது. இதனை தொடர்ந்து வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் 19 பேர் காயமடைந்து உள்ளனர்.  மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →