கோப்புப்படம் 
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய 539 பெண்கள் விண்ணப்பம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கும் 3 லட்சம் பக்தர்களில் 10 - 50 வயதுடைய 539 பெண் பக்தர்களும் அடங்குவர்.

DIN


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கும் 3 லட்சம் பக்தர்களில் 10 - 50 வயதுடைய 539 பெண் பக்தர்களும் அடங்குவர்.

ஐயப்பனை தரிசிக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை சபரிமலை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

இதில், வரும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சுமார் 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

10 - 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 3,505 பேர் கைது செய்யப்பட்டு 529 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஆன்லைனில் 539 பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT