முகப்பு
இந்தியா

சபரிமலை எஸ்.பி. அலுவலகம் நோக்கி பாஜக பேரணி அறிவிப்பு

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

Updated On : 26 நவம்பர், 2018 at 5:46 PM
பகிர்:

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கேரள போலீஸார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக அம்மாநில பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் அறிவித்துள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக சபரிமலை மாவட்ட பாஜக தலைவர் என்.ஹரி குற்றம்சாட்டினார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருவதாக கடுமையாகச் சாடினார்.

அதுமட்டுமல்லாமல் நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டதாகவும் என்.ஹரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.