முகப்பு
இந்தியா

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புதிய கட்டடத்தில் ஆந்திர உயர் நீதிமன்றம்

புதிய உயர் நீதிமன்ற கட்டடத்தை ஆந்திர நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Updated On : 27 நவம்பர், 2018 at 3:06 PM
பகிர்:

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தெலங்கானா மற்றும் ஆந்திர என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவின் அரசு அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆந்திர தலைநகரான அமராவதிக்கு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமராவதியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் ஆந்திராவுக்கான உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக புதிய உயர் நீதிமன்ற கட்டடத்தை ஆந்திர நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இந்த மாற்றம் உடனடியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.