முகப்பு
இந்தியா

7 குற்றங்கள் குறித்து ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் வசதி விரைவில் துவக்கம்

இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக 7 குற்றங்கள் மற்றும் சில சேவைகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு விரைவில் ஏற்படுத்த உள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:


புது தில்லி: இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக 7 குற்றங்கள் மற்றும் சில சேவைகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு விரைவில் ஏற்படுத்த உள்ளது.

இதற்கென பிரத்யேகமாக சிட்டிசன் - சென்ட்ரிக் இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான இந்த இணையதளம் வாயிலாக வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துவது, குடியிருப்பு வீட்டை வாடகைக்கு விடுதல், வாகன ஓட்டுநர்களை வேலைக்கு நியமித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 7 குற்றங்கள் குறித்து இந்த இணையதளம் வாயிலாகவே புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும் என்றும் இதில் சான்றிதழ்கள் தொலைந்து போவது அல்லது கிடைத்திருப்பது, வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.