இந்தியா

விரைவில் பெயர் மாறுகிறதா அலகாபாத்?: முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் 

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

DIN

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல்  தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பல்வேறு தரப்பினரிடமும்  கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அலகாபாத் என்னும் பெயரானது 'பிரயாக்ராஜ்' என மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பெயர் மாற்ற அறிவிப்பானது கும்பமேளா தொடங்குவதற்கு முன் வெளியாகும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT