இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயர் பரிந்துரை 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

ANI

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. நீதித்துறையின் மரபுப்படி தற்போதைய தலைமை நீதிபதி தனக்கு அடுத்து பதவிக்கு வருபவரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்.

அதன்படி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் இறுதி செய்யப்படும்.

1954 ஆம் ஆண்டு பிறந்த கோகாய் 28.02.2001 அன்று கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 23.04.2012 ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக விளங்கப் போகும் அவர், அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு உள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு - தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் ஜாமீனில் விடுவிப்பு

மணிப்பூரில் இடம்பெயா்ந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் -முதல்வா் கெம்சந்த் சிங்

பாஜகவின் புகாரால் லட்சக்கணக்கான ‘சந்தேக வாக்காளா்கள்’ நீக்கம் - அஸ்ஸாம் முதல்வா்

கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை வெகுவாக சரிவு - மத்திய அரசு

இந்தியாவுடன் எஃப்டிஏ மிக முக்கிய சாதனை: பிரிட்டன்

SCROLL FOR NEXT