இந்தியா

தெலங்கானா பேருந்து விபத்து: உயிரிழப்பு 52-ஆக அதிகரிப்பு

இந்த பேருந்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

DIN

தெலங்கானா மாநிலத்தின் ஜகிதியால் மாவட்டத்தில் உள்ள கொண்டாகட்டு பகுதியில் அமைந்துள்ள மலைப்பாதையில் அம்மாநில அரசுப் பேருந்து செவ்வாய்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், விபத்து காரணமாக இப்பேருந்தில் பயணம் செய்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை அறிவித்தார். 

மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலங்கானா விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, இப்பேருந்து விபத்தின் கோரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கண்டு மனம் வேதனை அடைகிறது. அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண உடல்நலன் பெற வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT