இந்தியா

விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வி: மாயாவதி குற்றச்சாட்டு

DIN


பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வியடைந்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது அரசு ஆட்சிக்காலத்திலும் மக்கள் விரோத கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது.
விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் துன்பப்படும் நிலையில், பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாஜக தலைவர்கள் பதிலளிப்பதை தவிர்க்கின்றனர். பெட்ரோலியப் பொருள்கள் தொடர்பாக நடைமுறைக்கு ஒவ்வாத, நியாயமில்லாத கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்த விவகாரத்தில் தனது தொழிலதிபர்கள் நண்பர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், மத்தியில் ஆளும் மோடி அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸும், பாஜகவும் தோல்வியடைந்து விட்டன. இதனால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது மோடி அரசு இரக்கம் காட்டவில்லை. மத்திய அரசு விரும்பினால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT