ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹோட்டலில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீநகரின் ரீகல் சௌக் பகுதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டது. இது விறுவிறுவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதிருஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.