இந்தியா

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த விநோத உத்தரவு: என்ன செய்யப்போகிறது பெங்களூரு மாநகராட்சி?

DIN


பெங்களூரு மாநகரச் சாலைகளின் மோசமான நிலை குறித்து விசாரித்து வரும் அம்மாநில உயர் நீதிமன்றம், சாலையில் எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ணி வருமாறு உத்தரவிட்டது.

பெங்களூருவில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு சாலையில் காணப்படும் குழிகளும் காரணம் என்றும், குழிகளை மூட உத்தரவிடக் கோரியும் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான நேற்றைய விசாரணையின் போது பெங்களூரு சாலையில் மொத்தம் 1,600 குழிகள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததற்கு, சாலைகளில் இருக்கும் குழிகளை எண்ணுவதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வியாழக்கிழமைக்குள் பெங்களூரு சாலைகளில் ஒரு குழியும் இல்லாமல், எந்த திசையில் இருந்து பார்த்தாலும் பொலிவுடன் காணப்பட வேண்டும். இதற்காக நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது இந்த வேலை செய்து முடிக்கப்படவேண்டும் என்று மாநகராட்சிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT