இந்தியா

பந்திபோராவில் தேடுதல் வேட்டை: பயங்கரவாதிகள்-ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சூடு

DIN

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழுக்கும் விதமாக அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள சும்லார் காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT