ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
துஜ்ஜர் என்ற பகுதியில் நௌபோரா கிராமத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சோபோர் மாவட்டத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சண்டை காரணமாக சோபோர் மாவட்டத்தில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. செல்போன சேவை முடக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.