இந்தியா

தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

IANS


புது தில்லி: புது தில்லியில் இன்று 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.

காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அஷோக் விஹார் பகுதியில் இருந்த 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அதன் நிலை மிக மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களும், தில்லி தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT