இந்தியா

பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது: வெங்கய்ய நாயுடு 

IANS

பனாஜி: வெறுமனே பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துளளார். 

கோவாவின் பனாஜி நகரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலே சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேசப்பற்று என்பது வெறுமனே பாரதமாதா படத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களை மறந்து  விடுவதோ அல்லது அவர்களை மோசமாக நடத்துவதோ அல்ல. நீங்கள் எல்லோரையும் மரியாதையுடன், அன்புடன் மற்றும் பாசத்துடன் நடத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான தேசப்பற்றுள்ளவராக இருக்க முடியும். 

நீங்கள் மற்றவர்களிடம் மதத்தின் பேரிலோ, பிராந்தியத்தின் பேரிலோ அல்லது மொழியின் பேரிலோ வேறுபாடு காட்டுவீர்கள் என்றால், நீங்கள் தேசியவாதி கிடையாது. 

அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம். எந்த ஜாதியாக இருந்தாலும், சமயமாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியா என்பது ஒன்றுதான். ஒரு நாடு.. ஒரே மக்கள்.. உங்கள் அனைவருக்கும் அந்த உணர்வு இருந்தாக வேண்டும். அதுதான் தேசப்பற்று. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயது வந்தோருக்கான சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு

எலக்சன் படத்தின் டிரெய்லர்

‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

சாமானியன் படத்தின் ஒளி வீசம் பாடல்

SCROLL FOR NEXT